குரூப் 2 தேர்விற்கான புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்து, பழைய முறையிலேயே தேர்வை நடத்த உத்தரவிட கோரிய மனு குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேர்வு முறை மாற்றம் கிராமப்புற மாணவர்களை பெருமளவில் பாதிக்கும் என கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.