தமிழ்நாடு

தமிழக - கர்நாடக எல்லையில் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் அமைதி நிலவுவதால் வாகனங்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக -கர்நாடக எல்லையில் அமைதி நிலவுவதால் வாகனங்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள், தங்கள் மாநில கொடிகளை வாகனங்களில் கட்டிக் கொண்டு சென்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சோதனைச் சாவடியில் அந்த கொடிகளை அகற்றுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதனையடுத்து சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் அங்கு பதற்றம் தணிந்து அமைதி நிலவுகிறது. தமிழக - கர்நாடக எல்லைகளில் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்