தமிழ்நாடு

பதவியேற்பு உறுதிமொழியும், உத்தரவும் - "தமிழக அரசும், அறநிலையத்துறை ஆணையரும் நவம்பர் 28க்குள் பதிலளிக்க உத்தரவு"

இந்து என்று உறுதிமொழி ஏற்காத அறநிலையத் துறை அதிகாரிகளை பதவிநீக்கம் செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில், அத்துறையின் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியில் சேரும் முன், இந்து மதத்தில் பிறந்த தாம், அந்த மதத்தை தொடர்ந்து பின்பற்ற உறுதிமொழி எடுப்பதுடன், உறுதிமொழி படிவத்திலும் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதரன் தாக்கல் செய்த மனுவில், தற்போதைய ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் உறுதிமொழி ஏற்கவில்லை என்றும், அவர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாரயணன், சேசஷாயி அமர்வு, மனுவுக்கு நவம்பர் 28ஆம் தேதிக்குள் பதிலளிக்கமாறு தமிழக அரசுக்கும், இந்து அறநிலையத்துறை ஆணையருக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்