புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு வரவேற்கத்தக்கது என்றும், இதனால் ஆரோக்கியமான போட்டி உருவாகும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழக மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் உலகத்தரத்திற்கு மாற்றப்படும் என்றும் கூறினார்.