தமிழ்நாடு

கொரோனா பணியில் ஈடுபட்ட காவலர்கள், மீண்டும் தங்களது சிறப்பு பிரிவு பணிக்கு செல்ல வேண்டும் - தமிழக டிஜிபி உத்தரவு

காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு கொரோனா கட்டுப்படுத்தும் பணிக்கு தமிழகம் முழுவதும் ஈடுபடுத்தப்பட்ட காவலர்களை, அவர்கள் வேலை பார்க்கும் சிறப்பு பிரிவில் மீண்டும் பணியை தொடர தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்

தந்தி டிவி

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு, போக்குவரத்து, சிபிசிஐடி, மத்திய குற்றப்பிரிவு, மது விலக்கு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் காவலர்கள் கொரோனா கட்டுப்படுத்தும் பணி, விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுத்தப் பட்டார்கள். தற்போது தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் ,கொரோனா கட்டுப்படுத்தும் பணியில் செயல்படும் சிறப்பு பிரிவு காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீண்டும் அவர்களது சிறப்பு பிரிவு பணிக்கு செல்லுமாறு தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார். அவர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள சிறப்பு பிரிவு தலைமை இடத்தில் உடனடியாக தகவல் தெரிவித்து பணியில் சேர வேண்டும் என தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்