தமிழ்நாடு

தமிழகத்தில் முதன்முறையாக பேனர்கள் இன்றி நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரம்

தமிழகத்தில் இடைத்தேர்தலின்போது முதன்முறையாக பேனர்கள் இன்றி பிரசாரம் நடைபெற்று வருவது, தொகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் இடைத்தேர்தலின்போது முதன்முறையாக பேனர்கள் இன்றி பிரசாரம் நடைபெற்று வருவது, தொகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் பேனர்கள் வைப்பதை தவிர்க்குமாறு தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் பேனருக்கு மாற்றாக, கட்சி கொடிகள், சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்களை பயன்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொகுதி மக்கள் வரவேற்று, பாராட்டு தெரிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்