தமிழ்நாடு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - வாக்குப்பதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கல்லூரியில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று காலை துவங்கியது.

தந்தி டிவி

சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி ஜெய்சந்திரன் தலைமையில் இன்று மாலை 4 மணி வரை இந்த தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் போட்டியிடுகின்றனர். இதுபோல, துணைத் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலில் ஆயிரத்து 303 பேர் வாக்களிக்க தகுதியுடைவர்கள். காலை 8.30 மணி அளவில் டி.ராஜேந்தர் தனது வாக்கை செலுத்திய நிலையில், சங்க உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா மூலம் வாக்கு பதிவு கண்காணிக்கப்படுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு நாளை 23 ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை