கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 12 ஆயிரத்து 436 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு ஏழரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளதாக அவர் கூறினார்.