டெல்லியில் மத்திய அரசு பிறப்பித்த மாணவர் போராட்ட தடை உத்தரவை அப்படியே தமிழக உயர்கல்வித்துறையில் அமல்படுத்திய தலைமை செயலாளரை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பேசிய மதுரை எம்பி சு.வெங்கடேசன், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்வி நிறுவனங்களில் மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்திய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நிர்வாகத்தில் உள்ள கருப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.