ஜூஜூவாடி ஆர்டிஓ அலுவலகத்தில் திடீர் ஆய்வு - ரூ.3.40 லட்சம் பறிமுதல் ஓசூர் அருகே தமிழக எல்லையில் உள்ள ஆர்டிஓ சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத 3 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தமிழக, கர்நாடக எல்லை பகுதியான ஜூஜூவாடியில் உள்ள ஆர்டிஓ சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது திடீரென நடைபெற்ற இந்த சோதனையில் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காலை முதல் ஆர்டிஓ சோதனை சாவடி பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.