கீழ்க்கட்டளையில் சுப்ரீம் மொபைல்ஸ் & எலக்ட்ரானிக்ஸின் புதிய கிளை
80-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட சுப்ரீம் மொபைல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின், புதிய கிளை சென்னை கீழ்க்கட்டளையில் திறக்கப்பட்டது. கட்டிட உரிமையாளர்கள் சந்தீப் குமார், சாரிகா ஆகியோர் ரிப்பன் வெட்டி புதிய கிளையை திறந்து வைத்தனர். திறப்பு விழாவை முன்னிட்டு, வாடிக்கையாளர் பயன்பெறும் வகையில், 3 நாட்களுக்கு மொபைல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு, சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் திரும்பப் பெறும் சலுகை, 60 சதவீதம் வரை தள்ளுபடி, 10 ஆயிரம் ரூபாய் வரை பழைய பொருட்களை மாற்றி வாங்கும் சலுகை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.