கோவை ஈஷா அறக்கட்டளையில் உள்ள எரிவாயு தகனமேடை தொடர்பான வழக்கில் மனுதாரர் எஸ்.என். சுப்ரமணியத்துக்கும், ஈஷா மையத்துக்கு இடையே மத்தியதஸ்தம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரனை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த விவகாரத்துக்கு தீர்வுகாணும் வகையில், குறிப்பாக மனுதாரின் இடத்தை வாங்குவதற்கு ஈஷா யோகா மையம் முன் வந்ததை கருத்தில் கொண்டு, மத்தியஸ்தம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரனை நியமித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.