தமிழ்நாடு

சென்னை To நெல்லை.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

தந்தி டிவி

கோடை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை-நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, நெல்லையில் இருந்து ஏப்ரல் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30-க்கு எழும்பூர் வந்தடையும்.

மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10-க்கு நெல்லை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியே இயக்கப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை