தமிழ்நாடு

120 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி - போராடி காப்பாற்றிய தீயணைப்புத்துறை

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே 120 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை, தீயணைப்புத்துறையினர் போராடி காப்பாற்றினர். நடு ஆறுபுளியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மனைவி அருள் மேரி, குடும்ப பிரச்சனையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சகாயகண்ணன் என்பவரின் தோட்டத்தில் உள்ள 120 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் கயிறு மூலம் அருள் மேரியை காப்பாற்றினர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்