தமிழ்நாடு

கூட்டுறவு சங்க கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - கரும்பு விவசாயிகள்

தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையொட்டி கரும்பு வெட்டும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

தந்தி டிவி

தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையொட்டி கரும்பு வெட்டும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்பனந்தாள், திருவையாறு, அம்மாபேட்டை, பாபநாசம், பூதலூர் ஆகிய வட்டாரங்களில் ஏறத்தாழ சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக கரும்புகள் வெட்டும் பணி தீவிரமடைந்துள்ளது. ஆனால் கரும்புகளை மிகக்குறைவான விலைக்கு வியாபாரிகள் வாங்கி செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். கரும்பு ஒன்று 10 முதல் 12 ரூபாய்க்கு மட்டுமே வாங்கப்படுவதாக அவர்கள் கூறினர். கரும்பு முழுவளர்ச்சி அடையும் நேரத்தில் கஜா புயல் தாக்கியதில் கரும்புகள் முற்றிலும் வேரோடு மண்ணில் சாய்ந்ததாகவும் அவர்கள் கூறினர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்