தமிழ்நாடு

Ranipettai Fire | ஐஸ்கிரீம் கடையில் திடீர் தீ விபத்து | பரிதாபமாக உயிரிழந்த ஓனர் & பெண் ஊழியர்

ஐஸ்கிரீம் கடையில் திடீர் தீ விபத்து | பரிதாபமாக உயிரிழந்த ஓனர் & பெண் ஊழியர்

Web Team - Thanthi TV

ராணிப்பேட்டை அருகே ஐஸ்கிரீம் கடையில் திடீர் தீ விபத்து - 2 பேர் உயிரிழப்பு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தேவி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஐஸ்கிரீம் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் உடல் கருகி உயிரிழந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆற்காடு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடையின் ஷட்டர் மூடப்பட்டிருந்த நிலையில் அதனை உடைத்து, உள்ளே சிக்கி இருந்த இருவரையும் மீட்ட தீயணைப்பு வீரர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர். பெண் ஊழியர் சுந்தரி மற்றும் கடை உரிமையாளர் பவன்லால் ஆகியோர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து ஆற்காடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே