தமிழ்நாடு

"காரணமேயில்லாமல் திடீரென ஏற்பட்ட நில அதிர்வு" - பீதியில் சென்னை மக்கள்

தந்தி டிவி

சென்னையில், அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக அச்சமடைந்த குடியிருப்புவாசிகள், சாலையில் தஞ்சமடைந்தனர்.

சென்னை கொரட்டூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 180 வீடுகள் உள்ளன. இந்நிலையில், நள்ளிரவு சுமார் 1 மணியளவில், இந்த குடியிருப்பில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. சில வினாடிகள் கட்டிடங்கள் குலுங்குவது போல் உணர்ந்த குடியிருப்புவாசிகள், உடனடியாக தங்களது குடும்பத்தினருடன் கட்டிடத்தை விட்டு வெளியேறி சாலைக்கு வந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர், அதிகாரப்பூர்வ நிலநடுக்கம் பதிவாகவில்லை என குடியிருப்புவாசிகளிடம் தெரிவித்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி