Besant Nagar | போக்குவத்து திடீர் மாற்றம்.. பெசன்ட் நகர் நோக்கி படையெடுக்கும் பக்தர்கள்
சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் கொடியேற்று விழாவை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நடைபயணமாக பெசன்ட் நகர் நோக்கி சென்று வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக, காவல்துறை சார்பில் சாலையோரங்களில் பேரிகேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. கொடியேற்று விழாவையொட்டி, அடையாறு மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளில் இன்று மதியம் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.