தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கம் கேட்டு இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.