தமிழ்நாடு

"விபத்திற்கு பேனர் காரணம் இல்லை என சொல்வதா?" - சுபஸ்ரீ தாயார் கீதா வேதனை

"வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவது போல் பேசுவதா?"

தந்தி டிவி

விபத்திற்கு பேனர் காரணம் இல்லை என சொல்லி, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதா...? என சுபஸ்ரீயின் தாயார் கீதா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்து ஏற்பட்ட இடத்திற்கு ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வந்திருந்தால், சுப​ஸ்ரீயை காப்பாற்றியிருக்க முடியும் என்றார். போக்குவரத்து விதிப்படி, சுபஸ்ரீ தலைக்கவசம் அணிந்து மிதமான வேகத்தில் சென்றதாக குறிப்பிட்ட கீதா, விபத்திற்கு காரணம் பேனர் தான் என்றார். விபத்திற்கு காரணம் பேனர் இல்லை என்று கூறுவது தங்களுக்கு மிகுந்த மன வேதனை தருவதாக தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்