தமிழ்நாடு

கிட்னியை விற்று கடனை செலுத்த சொன்ன நண்பர் - ஸ்டூடியோ ஊழியர் தற்கொலை

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் கடன் தொல்லையால் வீடியோ பதிவு செய்துவிட்டு ஸ்டூடியோ ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். பள்ளிபாளையம், ஐந்து பனை பகுதியை சேர்ந்த நந்தகோபால் ஸ்டூடியோவில் ஃபோட்டோ எடிட் செய்யும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில், ஸ்டூடியோ மூலம் பழக்கமான தினேஷ், ஹரி ஆகியோரிடம் நந்தகோபால் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது. பணத்தை நந்தகோபால் திரும்ப கொடுக்காத நிலையில், தினேஷ், ஹரி ஆகியோர் அவரிடம் தொடர்ந்து பணம் கேட்டு வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த நந்தகோபால், தனது சாவுக்கு தினேஷ், ஹரி தான் காரணம் என வீடியோ பதிவு செய்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக, கிட்னியை விற்றாவது பணத்தை கொடுக்குமாறு, நந்தகோபாலிடம் தினேஷ் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது.         

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்