மாணவர்கள் அனைத்தையும் சமூகத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார். சென்னை வடபழனியில் தனியார் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, ராம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இதில் பேசிய இயக்குநர் பாரதிராஜா மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.