கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் உள்ள பெரும்பாலான கலை கல்லூரிகளில், விண்ணப்பம் பெற மாணவர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கலை அறிவியல் கல்லூரிகளின் தரம் மற்றும் விருப்பமான பாடங்களை தேர்வு செய்வதில் மாணவர்கள் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்ததன் காரணமாக, மாணவர்கள் மத்தியில் கலை அறிவியல் படிப்புகளின் மவுசு அதிகரித்திருப்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.