கோவை தனியார் பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து பூனையை, மாணவர் ஒருவர் கீழே தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள விலங்கு நல ஆர்வலர்கள், சம்பந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.