தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை -மருத்துவர் கைது

கரூரில் நிர்வாகியின் மகளை தனியறைக்கு வரவழைத்து அத்துமீறிய மருத்துவர் ரஜினிகாந்த், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

கரூரில் நிர்வாகியின் மகளை தனியறைக்கு வரவழைத்து அத்துமீறிய மருத்துவர் ரஜினிகாந்த், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள பிரபல எலும்பு முறிவு மருத்துமனையில், பெண் ஒருவர் பணியாற்றினார். அவருக்கு நிர்வாகத்துடன் மன வருத்தம் ஏற்பட்டு, பணிக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, 11ஆம் வகுப்பு படிக்கும் பெண் நிர்வாகியின் மகளான சிறுமியை, மருத்துவமனைக்கு வரவழைத்த மருத்துவர் ரஜினிகாந்த், தனியறையில் வைத்து அத்துமீறியதாக புகாரளிக்கப்பட்டது. இதன்பேரில், மருத்துவமனை மேலாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். தகவலறிந்த மருத்துவர் ரஜினிகாந்த் தலைமறைவானார். அவரை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்த தனிப்படை போலீசார், வேலாயுதம்பாளையத்தில் வைத்து கைது செய்தனர். நீதிபதி நசீமாபானு முன் ஆஜர்படுத்திய நிலையில்,15 நாள் நீதிமன்ற காவலில், கரூர் கிளை சிறையில் மருத்துவர் ரஜினிகாந்த் போக்சோ வழக்கில் அடைக்கப்பட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை