தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிப்பது தொடர்பாக, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மகேஸ்வரர் தயாள் மற்றும் தென்மண்டல ஐஜி ஆகியோர் தூத்துக்குடியில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். 10 தனிப்படைகள் அமைத்தும் குற்றவாளிகள் இன்னும் பிடிபடாத நிலையில், அவர்களை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.