தமிழ்நாடு

சூறாவளி காற்றுக்கு 1 லட்சம் வாழைகள் சேதம்...

நாங்குநேரி பகுதியில் கடும் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் கடும் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. நாங்குநேரி மற்றும் சுற்று வட்டார கிராமங்களான சூரங்குடி, பெரும்பத்து, களக்காடு, திருக்குறுங்குடி, சிறுவளஞ்சி பகுதிகளில் ஏத்தன் வகை வாழைகள் பயிரிடப்பட்டிருந்த நிலையில், நன்கு விளைந்து வாழை குலைகளுடன் இருந்தன. ஆனால், கன மழையுடன் சூறாவளி காற்று வீசியதால் அவை வேரோடு சாய்ந்தன. இதுபோல, கலுங்கடி, மஞ்சன்குளம், வீரான்குளம், நாங்குநேரி, மறுகால்குறிச்சி, பிள்ளைகுளம்,சிங்கநேரி, ஏமன்குளம், இறைப்புவாரி உள்ளிட்ட கிராமங்களிலும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் சாய்ந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்