தமிழ்நாடு

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - புயல் சின்னமாக மாறுமா...?

சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்துள்ளது படியே, காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் சந்திக்கும் பகுதியில் உருவாகியுள்ளது.

தந்தி டிவி

சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்துள்ளது படியே, காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் சந்திக்கும் பகுதியில் உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் , அது மண்டலமாகவும், தொடர்ந்து புயல் சின்னமாகவும் உருவாக வாய்ப்பு உள்ளது என நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த‌து. இந்த நிலையில், இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் சந்திக்கும் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரபூர்வ வலைதளத்தில் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரமணமாக வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு