தமிழ்நாடு

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - புயல் சின்னமாக மாறுமா...?

சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்துள்ளது படியே, காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் சந்திக்கும் பகுதியில் உருவாகியுள்ளது.

தந்தி டிவி

சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்துள்ளது படியே, காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் சந்திக்கும் பகுதியில் உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் , அது மண்டலமாகவும், தொடர்ந்து புயல் சின்னமாகவும் உருவாக வாய்ப்பு உள்ளது என நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த‌து. இந்த நிலையில், இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் சந்திக்கும் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரபூர்வ வலைதளத்தில் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரமணமாக வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?