ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆலோசிப்பதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியதற்கு தமிழக அரசின் மெத்தனமான போக்கே காரணம் என்றும், இந்த விவகாரத்தில் விரைவாக முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.