தமிழ்நாடு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி நியமனம்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக ஐபிஎஸ் அதிகாரி அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக ஐபிஎஸ் அதிகாரி அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பிரிவின் ஐ.ஜி.யாக இருந்த பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் கடந்த 30ம் தேதியுடன் நிறைவடைந்தது. அவருக்கு ஏற்கனவே நீதிமன்றம் மூலமாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், அந்த பதவிக் காலம் முடிந்து, மீண்டும் நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜியாக அன்பு நியமிக்கப்படுவதாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் பிரபாகர் அறிவித்துள்ளார். தற்போது, காவல்துறையின் நிர்வாக பிரிவு ஐ.ஜி.யாக அன்பு பணியாற்றி வருகிறார். அங்கிருந்து பணி மாற்றம் செய்யப்படுகிறார்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு