தமிழ்நாடு

மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி : 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

விருதுநகரில் மாநில அளவிலான சிலம்ப போட்டியில் பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 450க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தந்தி டிவி
விருதுநகரில் மாநில அளவிலான சிலம்ப போட்டி தொடங்கியது. இதில், பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 450க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் விருதுநகர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 32 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டுள்ளன. இரண்டு பிரிவுகளாக நடைபெறும் சிலம்ப போட்டியின் இறுதிப் போட்டி, ஞாயிற்றுக் கிழமை காலை நடைபெறுகிறது. முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகள் தேசிய சிலம்ப போட்டிக்கு தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி