தமிழ்நாடு

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கடன் பெறும் வழிகள் குறித்து 10 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கடன் பெறும் வழிகள் குறித்து மத்திய அரசு முன்மொழிந்ததற்கு எதிராக வாக்களித்தல் தொடர்பாக 10 மாநில முதலமைச்சர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தந்தி டிவி

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மத்திய அரசு முன்மொழிந்த கடன்பெறும் இரண்டு வழிகளை ஏற்று கொள்ள மறுத்ததற்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாக அக்கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

* மாநிலங்களுக்கு நிதியை வழங்க வேண்டியது, மத்திய அரசின் தார்மீக மற்றும் சட்டரீதியான கடமையாக இருக்கும் போது, அவ்வாறு வழங்கப்படாத நிதிக்கு பதிலாக கடன் வாங்கி கொள்ளுமாறு மத்திய அரசு முன்மொழிவது, மாநிலங்களுக்கான உரிமையை பரிதாபத்திற்கு உள்ளாக்குவது ஆகும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* 2017-18 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் மட்டும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக் கணக்கில் இருந்து 47 ஆயிரத்து 272 கோடி ரூபாயை, சட்டத்திற்குப் புறம்பாக, இந்தியத் தொகுப்பு நிதிக்கு மத்திய அரசு மாற்றியுள்ளதை சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டி காட்டியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைத் திரும்ப பெற இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காக மற்ற மாநிலங்களுடன் சேர்ந்து நீங்கள் நடத்தும் போராட்டம் வீண்போகாது என்றும் அக்கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு