தமிழ்நாடு

தோப்பில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல் : 7 பேர் கைது - போலீசார் அதிரடி

தோப்பில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல் : 7 பேர் கைது - போலீசார் அதிரடி

தந்தி டிவி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திக்கோவில் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கூமாப்பட்டி போலீசார், அத்திக்கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தனியார் தோப்பு ஒன்றில் கள்ளச்சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த மாரிமுத்து, பாண்டி, ஆறுமுகம் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்