ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஓ. பன்னீர்செல்வம் வழிபாடு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இரவு சாமி தரிசனம் செய்தார். முன்னதாக, தனது குலதெய்வம் வீற்றுள்ள செண்பக தோப்பிற்குச் சென்று வழிபாடுகளை முடித்த அவர், பின்னர் ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.. அதனைத் தொடர்ந்து ஆண்டாள் பிறந்த நந்தவனம் மற்றும் வடபத்ர சாயி கோவில்களிலும் அவர் வழிபாடு நடத்தினார்