தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு : தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை அடுத்துள்ள மலை அடிவாரத்தில் பழங்கால ஓடுகள், கற்கள் உள்ளிட்டவை அதிகளவில் காணப்படுகின்றன. இது குறித்து தகவலறிந்த கல்லூரி மாணவ-மாணவிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பழங்கால கற்கள் உள்ளிட்டவற்றை கண்டெடுத்தனர்.

அப்பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டுவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளம் தோண்டிய போது, பழங்கால ஓடுகள் கிடைத்ததாகவும் , அவை பழங்கால முதுமக்கள் தாழிகளின் ஓடுகளாக இருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியை பாதுகாத்து தொல்லியல்துறையினர் ஆய்வு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு