தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு : தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை அடுத்துள்ள மலை அடிவாரத்தில் பழங்கால ஓடுகள், கற்கள் உள்ளிட்டவை அதிகளவில் காணப்படுகின்றன. இது குறித்து தகவலறிந்த கல்லூரி மாணவ-மாணவிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பழங்கால கற்கள் உள்ளிட்டவற்றை கண்டெடுத்தனர்.

அப்பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டுவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளம் தோண்டிய போது, பழங்கால ஓடுகள் கிடைத்ததாகவும் , அவை பழங்கால முதுமக்கள் தாழிகளின் ஓடுகளாக இருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியை பாதுகாத்து தொல்லியல்துறையினர் ஆய்வு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு