தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு : தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை அடுத்துள்ள மலை அடிவாரத்தில் பழங்கால ஓடுகள், கற்கள் உள்ளிட்டவை அதிகளவில் காணப்படுகின்றன. இது குறித்து தகவலறிந்த கல்லூரி மாணவ-மாணவிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பழங்கால கற்கள் உள்ளிட்டவற்றை கண்டெடுத்தனர்.

அப்பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டுவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளம் தோண்டிய போது, பழங்கால ஓடுகள் கிடைத்ததாகவும் , அவை பழங்கால முதுமக்கள் தாழிகளின் ஓடுகளாக இருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியை பாதுகாத்து தொல்லியல்துறையினர் ஆய்வு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை