தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பு சிறப்பு பூஜை - ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதப்பிறப்பு சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதப்பிறப்பு சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கார்த்திகை மாதம் முடிந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு பின்பே மார்கழி மாத பூஜைகள் ஆரம்பிப்பது வழக்கம் ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் சூரிய பகவான் எந்த நேரத்தில் தனுர் ராசிக்கு பிரவேசிக்கிறாரோ அந்த நேரத்திலேயே மார்கழி மாதப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் நேற்று இரவு எட்டு முப்பது மணிக்கு மார்கழி மாதப்பிறப்பு கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஆண்டாளுக்கு தங்கத்தினால் திருப்பாவை நெய்யப்பட்ட புடவை அணிவிக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பாவை பாடப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை