தமிழ்நாடு

லைக்ஸ்களுக்காக ஆபத்தை உணராமல் சாகசம் எரியும் நெருப்பில் குதித்து சாகசம் செய்த இளைஞர்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே, குளத்து தண்ணீரில் பெட்ரோல் ஊற்றி சாகசம் செய்யும் வீடியோவை பதிவிட்ட யூடியூபர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தான்குளம் பகுதியை சே்ந்த ரஞ்சித் பாலா என்ற யூடியூபர், லைக்ஸ்களுக்காக தனது இன்ஸ்டாகிராமில் சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளார். அந்த வகையில் அவர் நண்பர்களுடன் சேர்ந்து, குளத்தில் உள்ள தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததுடன், எரியும் நெருப்பில் தண்ணீரில் குதித்து சாகசம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ போலீசாரின் கவனத்தை ஈர்த்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இது சம்பந்தமாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் யூடியூபர் ரஞ்சித் பாலா, அவரது நண்பரான சிவக்குமார் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை