ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா - சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் மூன்றாம் நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது.
இதில் நம்பெருமாள் சவுரிக்கொண்டை அலங்காரத்தில் திருவாபரணங்கள் சூடியபடி தங்க பல்லக்கில் எழுந்தருளினார். பின் மூலஸ்தானத்தில் இருந்து உள்பிரகாரங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.