தமிழ்நாடு

ஸ்ரீ ரங்கம் கோவில் சிலை திருட்டு புகார் விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீ ரங்கம் கோவிலில் சிலைகள் கடத்தப்பட்டதாக எழுந்த புகார் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி, 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது

தந்தி டிவி

ஸ்ரீ ரங்கம் கோவிலில் சிலைகள் கடத்தப்பட்டதாக எழுந்த புகார் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி, 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீ ரங்கம் கோவிலில், சிலைகள் எதுவும் திருடப்படவில்லை என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டனர். இந்த தகவலை, வழக்கு தொடர்ந்த ஸ்ரீ ரங்கம் ரங்கராஜன் நரசிம்மன், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்