108 தீப்பந்தங்கள் சூழ நம்பெருமாள் வீதியுலா ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் மாசித் தெப்பத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, பந்தகாட்சி கோலாகலமாக நடைபெற்றது. ஒற்றை பிரபை வாகனத்தில் 108 தீப்பந்தங்கள் சூழ நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வீதி உலா வந்தார். இதனை ஏராளமான பக்தர்கள் ரங்கா ரங்கா என முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.