தமிழ்நாடு

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி : ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்துடன் நிறைவு

சென்னை குருநானக் கல்லூரியில் நடைபெற்று வந்த இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்துடன் நிறைவுபெற்றது

தந்தி டிவி

கடந்த மாதம் 29-ஆம் தேதி சென்னை குருநானக் கல்லூரியில் தொடங்கிய இந்த கண்காட்சியில், வனப்பாதுகாப்பு, நாட்டுப்பற்று, சுற்றுச்சூழலை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் அரங்குகள் இடம் பெற்றிருந்தன.

விடுதலைப் போராட்ட தியாகிகளை பெருமைப்படுத்தும் வகையில், அந்தமான் சிறை, ஜாலியன்வாலாபாக் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகள் ஒலி,ஒளி காட்சிகளாக இடம் பெற்றன.

மேலும் பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற இந்த கண்காட்சியை 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

நிறைவு நாளில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்துடன், இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நிறைவு பெற்றது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை