தமிழ்நாடு

கடலில் தத்தளித்த மீனவர்களுக்கு உதவிய இலங்கை கடற்படை

கச்சதீவு அருகில் கடலில் தத்தளித்த தமிழக படகு மற்றும் படகில் இருந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

தந்தி டிவி
கச்சதீவு அருகில் கடலில் தத்தளித்த தமிழக படகு மற்றும் படகில் இருந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படை கப்பல் குழுவினரால், கடலில் தத்தளித்த படகு ஒன்று தத்தளித்து கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த படகில் உள்ளவர்களுக்கு உடனடியாக தொழில் நுட்ப ஆதரவை வழங்க முன்வந்துள்ளனர். மேலும் சோர்வான நிலையில் இருந்த மீனவர்களுக்கு உணவு மற்றும் பானங்களையும் இலங்கை கடற்படையினர் அளித்துள்ளனர். படகில் இருந்த 4 மீனவர்களும் 37 முதல் 60 வயது வரையிலானவர்கள் என்றும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிந்த பின்னர் அவர்களை, மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்வள ஆய்வாளரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்