தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் : நடுக்கடலில் சிங்கள மீனவர்கள் அத்துமீறல்

கோடியக்கரை அருகே நாகை மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சிங்கள மீனவர்கள், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி
நாகை மாவட்டம் நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, இன்று அதிகாலை கண்ணன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 6 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அதிவேக படகில் அங்கு வந்த சிங்கள மீனவர்கள் அரிவாள் மற்றும் கட்டைகளை கொண்டு, படகின் உரிமையாளர் கண்ணன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கண்ணனின் கை,கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. படகில் இருந்து 4 லட்சம் மதிப்பிலான வலை, மீன்கள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை சிங்கள மீனவர்கள் பறிமுதல் செய்தனர். காயம் அடைந்த மீனவர்கள் நாகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வாரத்தில் மட்டும் 3-வது முறையாக சிங்கள மீனவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதால், தமிழக மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்