தமிழ்நாடு வீல்சேர் கூடைப்பந்து கழகத்தின் சார்பாக விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து, 5வது தேசிய அளவிலான வீல்சேர் கூடைப்பந்து போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்றதை கூறி வாழ்த்து பெற்றனர். அவர்களின் குறைகளை கேட்டறிந்த கமல்ஹாசன், அவற்றை சரிசெய்வதற்கு உதவுவதாக நம்பிக்கை தெரிவித்தார்.