தமிழ்நாடு

Subramanian Swamy| திருத்தணியில் வைகாசி விசாக சிறப்பு அபிஷேகம்-பார்த்து மனம் உருகி வேண்டிய பக்தர்கள்

திருத்தணியில் வைகாசி விசாக சிறப்பு அபிஷேகம்-பார்த்து மனம் உருகி வேண்டிய பக்தர்கள்

thanthitv

திருத்தணியில் வைகாசி விசாக சிறப்பு அபிஷேகம் - பார்த்து மனம் உருகி வேண்டிய பக்தர்கள் #Thiruttani #SubramanianSwamy #murgan #thanthitv திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு உற்சவர் சண்முகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதிகாலை மூலவர் முருகப்பெருமானுக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பட்டு வஸ்திரம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் சண்முகப் பெருமானுக்கு வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவில் முழுவதும் “அரோகரா” என்ற பக்தி முழக்கங்கள் ஒலிக்க, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Karur | CM Vijay | கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை.. தமிழக அரசு விளக்கம்

CM Vijay | Law and Order | சட்டம் ஒழுங்கு - CM விஜய் அதிரடி

Uttar Pradesh | சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த கொடூர ஆசிரியை.. கதறும் பெற்றோர்

Police Arrest | சென்னை முழுக்க சல்லடை போட்டு - 92 பேரை தூக்கிய போலீஸ்

Jananayagan | 'ஜனநாயகன்' படம் திடீர் நிறுத்தம்சென்னையில் பரபரப்பு