தமிழ்நாடு

சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் புகார் : நெல்லை ஆட்சியர், தேர்வு வாரியத்துக்கு நோட்டீஸ்

சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் புகார் தொடர்பாக நெல்லை ஆட்சியர், தேர்வு வாரியத்துக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தந்தி டிவி
நெல்லையைச் சேர்ந்த முத்து என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், ஓவிய ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றிருந்தும், தனக்கு பணி வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலருக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புகார் தொடர்பாக 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான பதிலை ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த பதிலும் வரவில்லை எனில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு