தமிழ்நாடு

குரு பெயர்ச்சி : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

குருப்பெயர்ச்சியையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தந்தி டிவி

* துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியானார். கும்பகோணம் அருகே உள்ள குருஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடைபெற்றது.

* நேற்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை முடிந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.. பின்னர் மலர் அலங்காரத்துடன் குருபகவான் தங்க கவசத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், இரவு பத்து - ஐந்து மணியளவில் குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியானார்.

* இதையொட்டி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபகவானுக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குருபகவானை வழிபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை