தமிழ்நாடு

தமிழகத்திற்கு தண்ணீர் தர முன் வந்த கேரள முதலமைச்சரின் உதவியை ஏற்பது குறித்து முதலமைச்சர் இன்று முடிவு அறிவிப்பார் - எஸ்.பி. வேலுமணி

தமிழகத்திற்கு தண்ணீர் தர முன்வந்த கேரள முதலமைச்சரின் உதவியை ஏற்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று முடிவு அறிவிப்பார் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், கேரள முதலமைச்சரின் செயலாளர், தமிழக செயலாளரிடம், ரயில் மூலம் 20 வேகன்களில் தண்ணீர் அனுப்பலாமா என கேட்டதாக கூறியுள்ளார். சென்னையின் ஒருநாள் குறைந்தபட்ச தேவை 525 லட்சம் லிட்டர் தண்ணீர் என்றும், தேவை ஏற்பட்டால், கேரள அரசின் உதவியை நாடுவோம் என, முதலமைச்சர் கூறியதாக வேலுமணி கருத்து பதிவிட்டுள்ளார்.நாளை அதாவது வெள்ளிக்கிழமையன்று, நடைபெற உள்ள குடிநீர் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, முதலமைச்சர் பழனிசாமி உரிய முடிவை அறிவிப்பார்கள் என்றும் வேலுமணி கூறியுள்ளார்.கேரள அரசு வழங்கும் தண்ணீரை, மறுத்து விட்டதாக வந்த தகவல் உண்மையில்லை என்றும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி