தமிழ்நாடு

தமிழகத்திற்கு தேவையான நிதி வழங்க மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை - அமைச்சர் வேலுமணி

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர்களிடம், அமைச்சர் வேலுமணி நேரில் வலியுறுத்தியுள்ளார்

தந்தி டிவி

டெல்லியில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரை, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தனித்தனியாக சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான சுமார் மூன்றாயிரத்து 558 கோடி ரூபாய் நிலுவை தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர்கள் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்