தமிழ்நாடு

சி.பா.ஆதித்தனார் 38வது ஆண்டு நினைவு நாள் : சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தி டிவி

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அடித்தட்டு மக்களுக்கும் அன்றாட செய்திகளை கொண்டு போய் சேர்த்த பெருமைக்குரியவர் சி.பா.ஆதித்தனார். தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் அரும்பாடுபட்ட அவரது 38ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு, தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர் சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குநர் சிவந்தி ஆதித்தன், தந்தி டிவி இயக்குநர் ஆதவன் ஆதித்தன் மற்றும் அவரது குடும்பத்தினரும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தினத்தந்தி, மாலைமலர், தந்தி தொலைக்காட்சி ஊழியர்கள் மரியாதை செலுத்தினர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?